Monday, 13th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: அம்பத்தூரில் ஜியோ டிஜிட்டல் கனெக்சன் நிறுவனம், இந்தியாவில் முதல் தகவல் தரவு மையத்தை தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப த்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குத்துவிளக்கேற்றி ரிப்பன்வெட்டி துவக்கி வைத்தார்.
நிகழ்வில் டிஜிட்டல் கனெக்சன் தலைமை நிர்வாக இயக்குனர் சி.பி.வேலாயுதம் மற்றும் முதலீட்டாளர்கள் பங்குதாரர்கள் ஊழியர்கள் உடனிருந்தனர்.
இந்த முதல் தரவு மையம் 20MW தகவல் தொழில்நுட்ப திறன் கொண்ட MAA10ல் 7 அடுக்குகளில் 1,96,000 சதுர அடி பரப்பளவில் உள்ளது.
கனடாவின் புரூக்ஃபீல்ட் உள்கட்டமைப்பு நிறுவனம் மற்றும் டிஜிட்டல் ரியாலிட்டியுடன் சேர்ந்து மூன்று வழி கூட்டு முயற்சியில் சம பங்குதாரராக உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக முகேஷ் அம்பானி தலைமை வகிக்கிறார்.